ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புகிறது ஏர் இந்தியா!

 

ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புகிறது ஏர் இந்தியா!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புகிறது ஏர் இந்தியா!

இந்நிலையில் ஊழியர்களை 6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு ஊதியமின்றி விடுப்பில் அனுப்பும் திட்டத்துக்கு ஏர் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.  2 ஆண்டு விடுப்பு என்பதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புகிறது ஏர் இந்தியா!
ஏற்கனவே ஏர் இந்தியா வெளியிட்ட சுற்றறிக்கையில், ஊழியர்களுக்கான சலுகைகளை 50% குறைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.