இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செல்ல தடை!

 

இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செல்ல  தடை!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இந்தியாவில் இருந்து துபாய்க்கு 15 நாட்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் கூட முடிவுக்கு வந்த பாடில்லை. தொடர்ந்து மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செல்ல  தடை!

வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கொரோனா பரவலால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செல்ல  தடை!

இந்நிலையில் துபாய்- இந்தியா இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாய்க்கு சென்ற விமானத்தில் 2 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துபாய் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை துபாய் – இந்தியா விமான சேவை ரத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது