ஏன் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி? எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

 

ஏன் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி? எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

கொரோனாவால் இந்தியாவில் பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாதிக்கப்பட்டார். இவர் கொரோனாவில் இருந்து மீளுவதற்கு முன்னரே, கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததாக பாஜக எம்.பி தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து விட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி வீட்டிலேயே தனிமையில் இருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

ஏன் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி? எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

கொரோனாவில் இருந்து மீண்ட அமித்ஷா இன்று காலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும், ஏன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பரபரப்பான கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக உடல் சோர்வு, உடல் வலியால் அமித்ஷா அவதிப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும் மருத்துவமனையில் இருந்த படியே தனது பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.