“கொரானா கால கொடுமை” -எய்ம்ஸ் டாக்டர் எடுத்த விபரீத முடிவு -ஒரு மனநல மருத்துவரே தற்கொலை செய்து கொண்ட கொடுமை ..

 

“கொரானா கால கொடுமை” -எய்ம்ஸ் டாக்டர் எடுத்த விபரீத முடிவு -ஒரு மனநல மருத்துவரே தற்கொலை செய்து கொண்ட கொடுமை ..

புதுடெல்லியில் உள்ள (தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம்) எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் அனுராக் குமார் என்பவர் மனநல மருத்துவராக பணிபுரிகிறார் .அவரிடம் சிகிச்சைஎடுத்துக்கொண்ட ஏராளமான நோயாளிகள் குணமாகி இப்போது நல்ல நிலையில் இருக்கின்றனர் .

“கொரானா கால கொடுமை” -எய்ம்ஸ் டாக்டர் எடுத்த விபரீத முடிவு -ஒரு மனநல மருத்துவரே தற்கொலை செய்து கொண்ட கொடுமை ..ஆனால் கடந்த சில மாதமாக அந்த மனநல மருத்துவர் குமாருக்கே, இந்த கொரானா காலத்தில் கடுமையான மன அழுத்த நோய் ஏற்பட்டுள்ளது .இதனால் கடுமையான மன உளைச்சலில் அவர் அந்த எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார் .அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார் .இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அந்த எய்ம்ஸ் ஹாஸ்பிடலின் பத்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் .

“கொரானா கால கொடுமை” -எய்ம்ஸ் டாக்டர் எடுத்த விபரீத முடிவு -ஒரு மனநல மருத்துவரே தற்கொலை செய்து கொண்ட கொடுமை ..அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எந்த தற்கொலை குறிப்பையும் எழுதி வைக்கவில்லை என்று அவரின் உடலை கைப்பற்றிய காவல் அதிகாரிகள் கூறினர் .அவரின் செல்போன் அவர் இருந்த அறையிலிருந்து கைப்பற்றப்பட்டது .அப்போது அவரின் சமூக ஊடக கணக்கை ஆராய்ந்த போலீசார் ,அவர் ஜூன் 21ம் தேதி தன்னுடைய வலைப்பதிவில் “ஒரு மன நல மருத்துவரின் தற்கொலை போராட்டம் “என்ற தலைப்பில் தான் தற்கொலை எண்ணத்துடன் போராடி வருவதாகவும் ,

“கொரானா கால கொடுமை” -எய்ம்ஸ் டாக்டர் எடுத்த விபரீத முடிவு -ஒரு மனநல மருத்துவரே தற்கொலை செய்து கொண்ட கொடுமை ..தன்னுடைய தாயார் ஆதரவு தான் இன்னும் உயிரோடு இருக்க காரணமென்றும் ,தியானம் மற்றும் உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் ,மன அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டு இரண்டையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார் .
இந்த தற்கொலை பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் ஆதர்ஷ் கூறுகையில், “டாக்டர் அனுராக் அனுராக் மிக சிறந்த மருத்துவர் ,அவர் இப்படி செய்வதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார் .