பென்னிகுவிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைத்தால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும்!

 

பென்னிகுவிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைத்தால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும்!

தென் தமிழகத்து மக்களின் எதிர்ப்பை மீறி கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமேயானால் , விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

பென்னிகுவிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைத்தால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும்!

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் நினைவு இல்லம் தமிழக அரசால் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட நினைவு என்பதை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் மதுரையில் முன்னாள் முதல்வரின் பெயரிலான நூலகம் அமைக்க பொதுப்பணித்துறை கட்டிடத்தில் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து இருப்பதாகவும் பத்திரிகைகள் செய்திகள் வந்துள்ளன.

பென்னிகுவிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைத்தால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும்!

இந்த செய்தியை பார்த்தவுடன் ‘சொந்த காரியம் என்று வரும் போது மனிதன் குருடன் ஆகிவிடுகிறான்’ என்கின்ற வரிகள் தான் எங்கள் நினைவிற்கு வருகின்றன ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளோ இதற்கு நேர் மாறான கருத்து தெரிவிக்கிறார்கள் . செந்தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு வித்திட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் மதுரை மாநகரின் நத்தம் செல்லும் சாலையில் வாழ்ந்ததாகவும் அதற்கு ஆதாரமாக தன்னுடைய உடைகளை சுவற்றில் தொங்க விடுவதற்கு ஸ்டாண்ட், பெரியாறு இல்லம் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருந்ததாகவும் இது உண்மை என்பதால் தான் மதுரை மாநகர பொதுப்பணித்துறை வளாகத்தில் திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2000ம் ஆண்டு கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் முழு உருவச்சிலை, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் இப்புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான் ;எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும், அதனை உடனே நிறைவேற்ற வேண்டும், இதை தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கும் இடம் இல்லை, ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை என்று பொறிக்கப்பட்டு இருக்கிறது என்றும் இந்த சொற்களுக்குச் சொந்தக்காரர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தான் என்றும் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

தன்னம்பிக்கையுடன் மன உறுதியுடன் விடாமுயற்சியுடன், துணிவுடன், செயல்படும் தமிழ் நாட்டிற்காக தமிழக மக்களுக்காக குறிப்பாக விவசாயிகளுக்காக பாடுபட்டு முல்லைப் பெரியாறு அணையை, உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு அங்கு கலைஞரின் பெயரில் நூலகம் அமைப்பது என்று முடிவு சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம் என்பதை சுட்டிக்காட்டி அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் யாருக்கும் ஆட்சேபணை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தென் தமிழகத்து மக்களின் எதிர்ப்பை மீறி கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு இல்லத்தில் கலைஞர் நூலகம் கட்டப்படும். ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.