சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

 

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சிறையிலிருந்து சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும் என அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

தமிழக சட்டமன்ற தேர்தல் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகலாவின் விடுதலை பேசும் பொருளாக மாறியுள்ளது. சசிகலா விடுதலையாகும் பட்சத்தில் அதிமுகவிலிருந்து எத்தனை பேர் அவர் பக்கம் சாய்வர். அதிமுகவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

அந்த வகையில் சசிகலா விடுதலை குறித்த பேசியுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல், சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும், அதிமுகவை மீட்பதற்கான பணிகளைத் தொடங்குவார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவரிடம் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி வைப்பது குறித்து சசிகலா, தினகரன் இருவரும் முடிவெடுப்பார்கள் என்றார்.

சசிகலா வந்ததும் அதிமுக மீட்கப்படும்!

சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து மறுப்பு கூறும் வரும் நிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரோ, அது கட்சியின் தலைமை எடுக்க வேண்டிய முடிவு நான் சாதாரண தொண்டன் தான் என்று நழுவியது குறிப்பிடத்தக்கது.