‘தேர்தல் பணிகளை அதிமுகவினர் இன்றே தொடங்குங்கள்’ : ஈபிஎஸ் – ஓபிஎஸ் அழைப்பு!

 

‘தேர்தல் பணிகளை அதிமுகவினர் இன்றே தொடங்குங்கள்’ : ஈபிஎஸ் – ஓபிஎஸ் அழைப்பு!

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான பணிகளை இன்றே தொடங்குவோம் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‘தேர்தல் பணிகளை அதிமுகவினர் இன்றே தொடங்குங்கள்’ : ஈபிஎஸ் – ஓபிஎஸ் அழைப்பு!

2021 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவினர் தேர்தல் பணிகளை இன்றே தொடங்க ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். அதிமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்று சாதனை படைப்போம்.

பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம் ; அதிமுக பொற்கால ஆட்சி தொடர சூளுரைப்போம் என்றும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். நாளை அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

‘தேர்தல் பணிகளை அதிமுகவினர் இன்றே தொடங்குங்கள்’ : ஈபிஎஸ் – ஓபிஎஸ் அழைப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் மட்டுமே உள்ளதால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக – அதிமுக தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர். திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தென் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை என திட்டங்களை முறையாக வகுத்து வருகிறது. இதனால் தற்போது அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆயத்தம் ஆகியுள்ளது. அதன் முன்னோட்டமாகவே அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.