‘’எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே’’-உதயநிதியின் ‘தறுதலை’ பேச்சுக்கு அதிமுகவினர் பதிலடி

 

‘’எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே’’-உதயநிதியின் ‘தறுதலை’ பேச்சுக்கு அதிமுகவினர் பதிலடி

கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பவர்களை, ‘கால்கட்டு போட்டா எல்லாம் சரியாகிடும்’என்று பொய்க்கணக்கு போடுவது மாதிரிதான் உதயநிதியை கட்சிக்குள் கொண்டுவந்தார்கள். ஐந்தில் வளையாதது திடீரென்று எப்படி வளையும். அவர் வந்த நாள் முதலாக சிறுபிள்ளைத்தனமா செய்யும் காரியங்களால் சீனியர்கள் கொதித்துப்போய் கிடக்கிறார்கள். நம்ம தகுதிக்கும் அனுபவத்திற்கும் இந்த சிறுசுக கிட்ட எல்லாம் சிக்கி இப்படி தகுதியை இழக்குறோமேன்னு பல சீனியர்கள் புலம்பித்தீர்க்கிறார்களாம்.

‘’எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே’’-உதயநிதியின் ‘தறுதலை’ பேச்சுக்கு அதிமுகவினர் பதிலடி

உதயநிதியால் உள்கட்சி விவகாரங்கள் இப்படி இருக்க, ‘கருத்து கந்தசாமி’ என்கிற பெயரில் பொதுவெளியில் இவர் பேசுவதை எல்லாம் காமெடியாகவே நினைத்து சிரிக்கிறார்கள் அவரது கட்சியினரே.

மூத்த தலைவர்கள் எல்லாம் எதிர்கட்சியினரை விமர்சிக்கும்போது, ஒரு தரத்தோடுதான் விமர்சிப்பாங்க. அடிமட்டத்தொண்டர் ரேஞ்சுக்கு இறங்கி வந்து விமர்சனம் செய்ய மாட்டாங்க. உதயநிதி மூத்த தலைவர் இல்லை என்றாலும், எதிர்கட்சியினரை தரம் இல்லாமல் விமர்சித்து வருவதை கட்சியினரே ரசிப்பதில்லை. தலைவரின் பிள்ளை என்று பார்த்தால் அவரோ தருதலை மாதிரி பேசுகிறாரே என்று கட்சியினர் முகம் சுழித்து வருகிறார்கள்.

உண்மை இவ்வாறிருக்க, இரண்டு மூத்த தலைவர்களை ‘தறுதலைகள்’என்று உதயநிதி பேசியது, அங்கிருந்த கட்சியினருக்கும், அதைக்கேள்விப்பட்ட எதிர்க்கட்சியினருக்கும் கொஞ்சமும் அதிர்ச்சியளிக்கவில்லை.

‘’எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே’’-உதயநிதியின் ‘தறுதலை’ பேச்சுக்கு அதிமுகவினர் பதிலடி

பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுக செயற்குழு கூடிய வேளையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, ’’அதிமுக தரப்பில் இரண்டு தறுதலைகள் இணைந்து செயற்குழு கூட்டம் நடத்தி வருகிறது. அதில் பாஜகவை சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’’என்று பேசியதை கேட்டுக்கொண்டிருந்த திமுகவினரே, ‘’பேச்சாளர்கள்தான் இறங்கி அடிப்பார்கள். பிரச்சாரத்திற்கு வரும் நடிகர்களில் கூட சின்ன நடிகர்கள்தான் அடிமட்ட ரேஞ்சுக்கு இறங்கிப்பேசுவார்கள். நம்ம உதநிதியும் சின்ன நடிகர்தானே; அதான் இப்படி இறங்கி அடிக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

‘’எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே’’-உதயநிதியின் ‘தறுதலை’ பேச்சுக்கு அதிமுகவினர் பதிலடி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரின் மீதான உதயநிதியின் இந்த விமர்சனம் குறித்து அதிமுக அடிமட்டத்தொண்டர்கள் கூட பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. உதயநிதியின் பேச்சை கேட்ட அப்பகுதியில் இருந்த அதிமுகவினரும் கூட,

’’தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
அதுபோல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே’’ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.

  • கே.