எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டும் அதிமுக தலைமை… காரணம் இது தான்!

 

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டும் அதிமுக தலைமை… காரணம் இது தான்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு தரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோர் இதுவரை தேர்வு செய்யப்படாத நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று கூறினார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டும் அதிமுக தலைமை… காரணம் இது தான்!

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் திமுக – அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதம் தான். ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் அதிகளவு வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளோம் என்று கோரினார். மேலும் சசிகலா குறித்து பேசிய ஜெயக்குமார், சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலை தொடரும். புதிதாக அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய மாட்டோம். ஈபிஎஸ்- ஓபிஎஸ் கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் கூறினார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டும் அதிமுக தலைமை… காரணம் இது தான்!

அதிமுகவை கைப்பற்ற முடிவு செய்திருக்கும் சசிகலா அவ்வப்போது, அதிமுக பிரமுகர்களுடன் பேசுவது போல தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வருகிறார். இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவின் ஆடியோக்கள் பற்றியும் பேசப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.