குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி, அதிமுக எம்எல்ஏ மனு

 

குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி, அதிமுக எம்எல்ஏ மனு

திண்டுக்கல்

குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம், அதிமுக எம்எல்ஏ பரமசிவம் கோரிக்கை மனுவை அளித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கன்னிமார்கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், சுமார் 6 ஆண்டுகளாக குடகனாற்றில் தண்ணீர் வரத்து இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், குடகனாற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, குடகனாறு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி, அதிமுக எம்எல்ஏ மனு

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியிடம், வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், நதிநீர் பங்கீடு மற்றும் விவசாயிகளின் தொடர் போராட்டத்தை கருத்தில் கொண்டு, குடகனாற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.