கட்சியில் பல அடிதடிகளை பார்த்து விட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம் : அமைச்சர் கருப்பணன்
Sep 13, 2020, 14:38 IST1599988124000
நல்ல நேரம் வந்தால் கோடீஸ்வரன் ஆகலாம் என்று அதிமுக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், “பணம் சம்பாதிக்க அமைச்சர், எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பதில்லை, நல்ல நேரம் வந்தால் கோடீஸ்வரன் ஆகலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கட்சியில் பல அடிதடிகள், போராட்டங்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம்” என்றார்.