‘இந்து முன்னேற்ற கழக பிரமுகர் மிரட்டல்’: அதிமுக தொண்டர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

 

‘இந்து முன்னேற்ற கழக பிரமுகர் மிரட்டல்’: அதிமுக தொண்டர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜீவானந்தம். அதிமுகவை சேர்ந்த அவர் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை திடீரென கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த இவர், தீக்குளிக்க முயன்றுள்ளனர். அச்சமயம் அங்கிருந்த ரிப்போட்டர்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

‘இந்து முன்னேற்ற கழக பிரமுகர் மிரட்டல்’: அதிமுக தொண்டர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், போராடி தீக்குளிக்க விடாமல் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து, ஜீவானந்தத்திடம் விசாரித்ததில் இந்து முன்னேற்ற கழக மாநில அமைப்பாளர் மணிகண்டன் என்பவர், தனது 6 செண்ட் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, நிலத்தை கொடுத்துவிடுமாறு தினமும் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஜீவானந்தத்தையும் அவரது குடும்பத்தினரையும் ஜீப்பில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். அதிமுக உறுப்பினர் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.