“தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 

“தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருச்சி

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ந்து நீடிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருச்சியில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த முதலமைச்சர், தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறு வருவதாகவும், புதிதாக வேறு கட்சிகள் இணைவது குறித்து தேர்தல் நேரத்தில் தான் தெரியும் என்றும் அவர் கூறினார்.

“தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா வெளியே வந்த பிறகு அரசியலில் எந்த மாற்றமும் நடக்காது என்றும், பா.ஜ.க தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருப்பதாக தான் கூறுவதாகவும் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதாகவும், மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், தான் அரசியலில் இருக்கும் வரை எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று கூறிய முதலமைச்சர், பள்ளி பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்றும் கூறினார்.