“வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல” – முதல்வர் பேச்சு!

 

“வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல” – முதல்வர் பேச்சு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கிறார். அதோடு, விவசாயிகளை நேரில் சந்தித்தும் மக்களின் இல்லங்களுக்கே சென்றும் ஆதரவு திரட்டி வருகிறார்.

“வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல” – முதல்வர் பேச்சு!

இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் பரமக்குடியில் நெசவாளர்கள் மற்றும் சிறுவணிகர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடி வருகிறார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் பாதுகாப்பான அரசாக அதிமுக உள்ளது என்றும் வியாபாரிகளிடம் அடாவடி வசூலை அதிமுக அரசு தடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல என்றும் வியாபாரிகள் சுதந்திரமாக செயல்பட உறுதி செய்யும் அரசு அதிமுக அரசு என்றும் அவர் கூறினார்.