“அதிமுக அச்சத்தில் இருக்கிறது” : பொன்.ராதாகிருஷ்ணன்

 

“அதிமுக அச்சத்தில் இருக்கிறது” : பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக யாருக்கும் அச்சப்பட தேவையில்லை என்று பாஜகவின் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“அதிமுக அச்சத்தில் இருக்கிறது” : பொன்.ராதாகிருஷ்ணன்

சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியத சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

“அதிமுக அச்சத்தில் இருக்கிறது” : பொன்.ராதாகிருஷ்ணன்

அப்போது பேசிய கே.பி.முனுசாமி , தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை என்று தெரிவித்தார். அதேபோல் சில புல்லுருவிகள் அதிகமுவை வீழ்த்த நினைத்தன. அது தவிடுபொடியாகிவிட்டது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

“அதிமுக அச்சத்தில் இருக்கிறது” : பொன்.ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவுக்கு ஆபத்து இருப்பது போலவும் , அச்சம் இருப்பது போலவும் தோன்றுகிறது. அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், நிர்வாகிகள் பேசியதை பார்க்கும் போது அச்சத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அதிமுக யாருக்கும் பயப்பட தேவையில்லை” என்றார்.