சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி!

 

சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி!

சென்னை திரும்பவுள்ள சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.

சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையாகியுள்ள சசிகலா, இன்று தமிழகம் வருகிறார். அவருக்கு பெங்களுருவில் கொரோனா சிகிச்சை அளித்த வந்த நிலையில் குணமாகியுள்ள அவர் இன்று சென்னை திரும்புகிறார். பெங்களூருவில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் காரில் சென்னை புறப்படுகிறார்.இதனிடையே மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகும் போது சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையானது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் எப்படி கட்சி கொடியை பயன்படுத்தலாம்? என அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர். அத்துடன் இதுகுறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி. வி. சண்முகம் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி!

இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்ப உள்ள சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.