அதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல்! இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்
அதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி தினம், மாலைக்குள் விருப்பமனுவை பூர்த்தி செய்து கொடுத்துவிட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்திருந்தனர். இன்று கடைசி தினம் என்பதால் விருப்ப மனுக்கள் தாக்கலை செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இன்று ஒரே நாளில் 8174 பேர் தங்களது விருப்ப மனுக்களை கட்சி அலுவலகத்தில் கொடுத்து உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடைபெற உள்ளது. அதிமுகவின் முக்கியஸ்தர்கள் பலருக்கு நேற்று ஒரு உத்தரவுடன் கொஞ்சம் பணம் வந்தததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து. கட்சியில் எடப்பாடியின் பலத்தை காட்ட பணம் கொடுத்து விருப்பமனுக்கள் விநியோகம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.