‘அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை; ரசமும் இல்லை’ : அமைச்சர் ஜெயக்குமார்

 

‘அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை; ரசமும் இல்லை’ : அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை; ரசமும் இல்லை’ : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை; காரசார விவாதம் நடைபெறவில்லை; கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார் . தொடர்ந்து பேசிய அவரிடம் சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதால் கூட்டம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, “நேற்றைய கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எழவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார்.

‘அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை; ரசமும் இல்லை’ : அமைச்சர் ஜெயக்குமார்

சட்ட பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், மறுபுறம் இபிஎஸ் ஆதரவாளர்கள் என முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்புக்கு மல்லுக்கட்டி வரும் நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் உயர்நிலை கூட்டம் நடந்தது. ஆனாலும் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவு எட்டப்படாததால் அதிமுக செயற்குழு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.