குடும்ப தகராறில் அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் மனைவி பிரிந்து சென்றதால் அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (41). இவர் கயத்தாறு நகர அதிமுக இளைஞர் பாசறை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி முத்துலெட்சுமி. கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப தகராறில் அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கார்த்திக் – முத்துலெட்சுமி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், முத்துலெட்சுமி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் கார்த்திக் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்வில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த, கயத்தாறு போலீசார், கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.