17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது
சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
ஆட்டையாம்பட்டி ஊராட்சியின் இரண்டாவது வார்டு உறுப்பினரும், அதிமுக இளைஞர் பாசறை கிளை செயலாளருமான வசந்தகுமார், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமியிடம் வசந்தகுமார், ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியதில் சிறுமி 7 மாத கர்ப்பமானார்.
இந்நிலையில் வசந்தகுமார் கருவை கலைக்க முயற்சி செய்தார். இது குறித்த தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் கொரானா பரிசோதனை செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வசந்தகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.