“அதிமுக தேர்தல் அறிக்கை…திமுக காணாமல் போகும்” : அமைச்சர் செங்கோட்டையன்

 

“அதிமுக தேர்தல் அறிக்கை…திமுக காணாமல் போகும்” : அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானால் திமுக காணாமல் போகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

“அதிமுக தேர்தல் அறிக்கை…திமுக காணாமல் போகும்” : அமைச்சர் செங்கோட்டையன்

சட்டமன்ற தேர்தல் வரும் எஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது . ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அமல்படுத்தியுள்ளது.விவசாயப் பயிர்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து, வன்னியர் இடஒதுக்கீடு, மாணவர்களுக்கு ஜிபி, 9 , 10, 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியது.இருப்பினும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதிமுக அரசு அறிவிக்க இருந்த பல்வேறு திட்டங்கள் தேக்கம் அடைந்துள்ளதாம்.

“அதிமுக தேர்தல் அறிக்கை…திமுக காணாமல் போகும்” : அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “இன்னும் 4 நாட்கள் கிடைந்திருந்தால்பல்வேறு சலுகைகளை அறிவித்திருப்போம். அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது. அதற்கான அறிவிப்பு வந்தாலே திமுக காணாமல் போகும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியதில் திமுகவை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.