ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த அதிமுக கோரிக்கை!

 

ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த அதிமுக கோரிக்கை!

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்களிக்கும் முறையை வரவேற்கிறோம் என்று அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த அதிமுக கோரிக்கை!

வருகிற 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பற்றி ஆலோசனை நடத்த இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சுசில் சந்திரா ,உமேஷ் சின்ஹா, ராஜ்குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு சென்னை வந்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு தனித்தனியே சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறது.

ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த அதிமுக கோரிக்கை!

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. வாக்குப்பதிவு இருக்குமிடத்தில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அதிமுக , 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் வாக்களிக்கும் முறையை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.முன்னதாக தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையரிடம் பாஜக, காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.