முன்கூட்டியே தேர்தலை நடத்த அதிமுக கோரிக்கை: காரணம் இது தான்!

 

முன்கூட்டியே தேர்தலை நடத்த அதிமுக கோரிக்கை: காரணம் இது தான்!

மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்துமாறு அதிமுக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்கூட்டியே தேர்தலை நடத்த அதிமுக கோரிக்கை: காரணம் இது தான்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையக் குழு சென்னை வந்திருக்கிறது. இக்குழு இன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நடத்திய ஆலோசனையில் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது திமுக தரப்பில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

முன்கூட்டியே தேர்தலை நடத்த அதிமுக கோரிக்கை: காரணம் இது தான்!

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏப்ரல் 3 ஆவது அல்லது 4ஆவது வாரத்தில் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்ததாகவும் மே மாதத்தில் அதிகமாக வெயில் இருக்கும் என்பதால் முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுத்ததாகவும் 500 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு செலுத்தும் வகையில் வாக்கு சாவடி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தேர்தலுக்காக ரூ.2,500 பணம் வழங்கப்படவில்லை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படுகிறது என்று கூறினார்.