“அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” – பொன் ராதாகிருஷ்ணன்

 

“அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” – பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தான் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” – பொன் ராதாகிருஷ்ணன்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார்அவரை முன்னிறுத்தி பரப்புரையும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் பாஜக தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பரபரப்பு தகவல் ஒன்றை அறிவித்தார். இதை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

“அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” – பொன் ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ‘அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தான் உள்ளது. மற்ற விஷயங்களை தலைமை தான் முடிவு செய்யும் அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை’ என தெரிவித்தார்.

“அதிமுகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” – பொன் ராதாகிருஷ்ணன்

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ” கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். பாஜக கொள்கைப்படி மாநில கட்சியுடன் அகில இந்திய கட்சி கூட்டணியில் இருக்கும் நிலையில் அவர்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர் ” என்றார்.