“அட்ரஸ் கேட்டுட்டு அதை ஏண்டா காமிக்கிறே..” -நடுரோட்டில் ஒரு மாணவியிடம் ஒரு வாலிபர் செய்த வேலை

 

“அட்ரஸ் கேட்டுட்டு அதை ஏண்டா காமிக்கிறே..” -நடுரோட்டில் ஒரு மாணவியிடம் ஒரு வாலிபர் செய்த வேலை


சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தன்னுடைய தனிப்பட்ட பாகத்தை காமித்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .

“அட்ரஸ் கேட்டுட்டு அதை ஏண்டா காமிக்கிறே..” -நடுரோட்டில் ஒரு மாணவியிடம் ஒரு வாலிபர் செய்த வேலை


குஜராத்தின் அகமதாபாத்தின் நவரங்க்புரா பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஒரு 21 வயதான சட்ட கல்லூரி மாணவியொருவர் புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது உஸ்மான்புரா பகுதியில் வசிக்கும் சிராக் பாட்டி என்ற 24 வயதான ஒரு வாலிபர் ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணின் அருகே அந்த வாலிபர் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அவரிடம் ஒரு அட்ரஸ் பற்றி விசாரித்தார் .அப்போது அந்த மாணவி அந்த அட்ரெஸ்ஸை கூறிக்கொண்டிருக்கும்போதே அந்த வாலிபர் தன்னுடையாய பேண்டை அவிழ்த்து தன்னுடைய தனிப்பட்ட பாகத்தை அவரிடம் காமித்தார் ,அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார் .இதனால் அந்த பெண் அதிர்ச்சியுற்று சத்தம் போட்டு ரோட்டில் போவோர் சிலரை உதவிக்கு கூப்பிட்டார் .அதனால் பயந்து போன அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .அதன் பிறகு அந்த பெண் அந்த வாலிபரின் ஸ்கூட்டர் நம்பரை செல்போனில் படமெடுத்து போலிசில் புகாரளித்தார் .
போலீசார் அந்த இடத்திற்கு வந்த அங்குள்ள சிசிடிவி கேமெரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள் .அப்போது இந்த செயலை செய்தது சிராக் பட்டி என்று கண்டறிந்தார்கள் .பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது .அவர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் ,தான் அவரை தொடமுடியாமல் அவதிப்பட்டதால் இப்படி தரைகுறைவாக நடந்து கொண்டதாக கூறினார் .போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தார்கள் .

“அட்ரஸ் கேட்டுட்டு அதை ஏண்டா காமிக்கிறே..” -நடுரோட்டில் ஒரு மாணவியிடம் ஒரு வாலிபர் செய்த வேலை