“பொண்டாட்டிகிட்டேருந்து பாதுகாப்பு கொடுங்க” -குடிகார மனைவியால் போலீஸ் ஸ்டேசனில் குடிபுகுந்த கணவன்

 

“பொண்டாட்டிகிட்டேருந்து பாதுகாப்பு கொடுங்க” -குடிகார மனைவியால் போலீஸ் ஸ்டேசனில் குடிபுகுந்த கணவன்

பொதுவாக கணவன் குடித்து விட்டு வந்து மனைவியை அடிப்பதாக கேள்விப்பட்டிருப்பீர்கள் ,ஆனால் ஒரு கணவன் தன்னுடைய பொண்டாட்டி குடித்துவிட்டு தன்னை தினமும் கொடுமைப்படுத்துவதாக போலீஸ் ஸ்டேசனில் புகாரளித்துள்ளார் .

“பொண்டாட்டிகிட்டேருந்து பாதுகாப்பு கொடுங்க” -குடிகார மனைவியால் போலீஸ் ஸ்டேசனில் குடிபுகுந்த கணவன்


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மணிநகர் பகுதி கோக்ரா பகுதியை சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் கடந்த வாரம் அங்குள்ள காவல் நிலையத்திற்கு ஓடிவந்து தன்னுடைய குடிகார மனைவியிடமிருந்து தனக்கும் தன்னுடைய பெற்றோருக்கும் பாதுகாப்பு தருமாறு கூறியது அங்கு பரபரப்பினை உண்டு பண்ணியுள்ளது .
அந்த நபரின் புகாரில் தன்னுடைய மனைவியை தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும் அப்போது தனக்கு தன்னுடைய மனைவிக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியாதென்றும் ,ஆனால் தன்னிடம் அதை மறைத்து விட்டு, தன்னை கல்யாணம் செய்து கொண்ட நாள் முதல் தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும் தன்னுடைய பெற்றோரையும் கொடுமை படுத்துவதகவும் ,கூறினார் ,.அவர் மேலும் கூறுகையில் கடந்த ஜூன் மாதம் தன்னுடைய பெற்றோருக்கு கொராணா வைரஸ் தாக்கியிருந்தது அப்போது அவர்களை தனியாக அடைத்து வைத்துவிட்டு, அவர் மாடியில் தனியாக குடி போய் விட்டாரென்றும் அதற்கு பிறகு அவர்களை வீட்டை விட்டு துரத்த தினமும் குடித்து விட்டு வந்து உதைப்பதாக கூறினார் .அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவரின் புகாரின் பேரில் நடவடி க்கையெடுப்பதாக உறுதியளித்த பின் அவர் வீட்டுக்கு சென்றார் .போலீசார் அவரை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு அவரின் மனைவியிடம் இந்த புகார் பற்றி விசாரித்து வருகிறார்கள்

“பொண்டாட்டிகிட்டேருந்து பாதுகாப்பு கொடுங்க” -குடிகார மனைவியால் போலீஸ் ஸ்டேசனில் குடிபுகுந்த கணவன்
FIR (Photo: IANS)