“ரெண்டு பொண்டாட்டியும் பெண்டு நிமிர்த்தறாங்களே “ரெண்டு பேரையும் சுட போன போலீசுகிட்ட சிக்கிய நபர்.

 

“ரெண்டு பொண்டாட்டியும் பெண்டு நிமிர்த்தறாங்களே “ரெண்டு பேரையும் சுட போன போலீசுகிட்ட சிக்கிய நபர்.

ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் தன்னுடைய மாமனார் மற்றும் சின்ன வீடு இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் டெல்லி போலிஸாரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

டெல்லி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் தஹியாவுக்கு அவருடைய மனைவியிடம் ஏற்பட்ட சண்டையால் அவர் பிரிந்து போனதால், அவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை சின்ன வீடாக வைத்து குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் அந்த தகியாவுக்கும் அவரின் சின்ன வீட்டு பெண்ணுக்கும் கடந்த திங்கள் கிழமை இரவு சண்டை வந்துள்ளது .இதனால் கோபப்பட்ட தஹியா அன்றிரவு அவரை காரில் கூட்டி சென்று ,அங்கு காருக்கு வெளியே அவரை ஓட விட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு ,அந்த சாலையிலேயே அவரை படு காயத்துடன் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டார் .அப்போது அந்த வழியே வந்த சில போலீசார் அந்த பெண்ணை மீட்டு அருகிலுள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
பிறகு கோபம் தணியாத தகியா நேராக தன்னுடைய மனைவியை சுடுவதற்கு ஹரியானா மாநிலம் சென்றார் .ஆனால் அப்போது அவரின் மனைவி வீட்டிலில்லாததால் ,அப்போது வீட்டிலிருந்தஅவரின் மாமனாரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார் .இந்த இரு துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட டெல்லி போலீசார் துப்பாக்கியால் சுட்டு விட்டு தலைமறைவான இன்ஸ்பெக்டர் தகியாவை வலைவீசி தேடி வருகின்றனர்

“ரெண்டு பொண்டாட்டியும் பெண்டு நிமிர்த்தறாங்களே “ரெண்டு பேரையும் சுட போன போலீசுகிட்ட சிக்கிய நபர்.