தந்தை இறந்தார் -சகோதரன் உதவினார் -அடுத்து அவரால் தங்கைக்கு நேர்ந்த நிலை .

 

தந்தை இறந்தார் -சகோதரன் உதவினார் -அடுத்து அவரால் தங்கைக்கு நேர்ந்த நிலை .


சகோதரரின் தயவில் வளர்ந்த ஒரு பெண்ணை அந்த சகோதரர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார்

தந்தை இறந்தார் -சகோதரன் உதவினார் -அடுத்து அவரால் தங்கைக்கு நேர்ந்த நிலை .


குஜராத்தின் அகமதாபாத்தின் மகர்பா பகுதியில் வசிக்கும் 15 வயதான பெண்ணுக்கு அவரின் தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டார் .அதனால் அந்த பெண் அவரின் சகோதரருடன் வசித்து வந்தார் .அந்த சகோதரருக்கு 26 வயதாகிறது .இந்நிலையில் அந்த சகோதரரின் ஆதரவில் அந்த 15 வயதான பெண் படித்து ,வளர்ந்து வந்தார் .
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த சகோதரர் அவரின் சகோதரியை பலாத்காரம் செய்து விட்டார் .அப்போது அவர் கத்தி கூச்சல் போட முயன்றார் .அப்போது அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் .அதனால் பயந்து போன அந்த பெண் எதுவும் பேச முடியாமல் இருந்தார் .அதன் பிறகு அவரின் பாலியல் தொல்லை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது .அப்போதெல்லாம் அவரின் ஆதரவில் அந்த பெண் வளரந்ததில் எதுவும் பேச முடியாமல் அந்த கொடுமைகளை பொறுத்து கொண்டிருந்தார் .பின்னர் அந்த பெண் மூன்று மாதமாக தனியாக வசித்தார் .அப்போது அவர் தனக்கு நடந்த கொடுமைகளை அவரோடிருந்த உறவினரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த உறவினர் அந்த சகோதரர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் ,போலீசார் அந்த சகோதரர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர் .பின்னர் இந்த வழக்கு பற்றி விசாரித்து வருகின்றனர்