‘ஜெயலலிதாவுக்கு பிறகு’… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!

 

‘ஜெயலலிதாவுக்கு பிறகு’… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. தற்போதைய நிலவரத்தின் படி திமுக 156 தொகுதிகளிலும் அதிமுக 78 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தில் உதய சூரியன் உதிக்கவிருப்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே ஸ்டாலினின் வெற்றியை திமுக தொண்டர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

‘ஜெயலலிதாவுக்கு பிறகு’… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!

நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நடிகர்கள் சித்தார்த், பிரகாஷ்ராஜ் மற்றும் சரத்குமார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

‘ஜெயலலிதாவுக்கு பிறகு’… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!

நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜெயலலிதாவுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். வாழ்த்துக்கள். எங்கள் அனைவரின் நலனுக்காக நீங்கள் சிறந்த ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவரும் உங்களை எதிர்பார்ப்புகளுடனும் கேள்விகளுடனும் உற்று நோக்குகிறோம். வாழ்க தமிழ்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஜெயலலிதாவுக்கு பிறகு’… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!

நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், மகத்தான வெற்றி. வாழ்த்துக்கள் ஸ்டாலின். தமிழக மக்கள் மாற்றத்தை தேர்ந்தெடுத்து விட்டார்கள். மாற்றம் நிகழும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஜெயலலிதாவுக்கு பிறகு’… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்!

மேலும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில், மகத்தான வெற்றி பெற்ற முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக கலைஞரின் மரபுகளை தொடருவீர்கள். நம் மாநிலமும் நாடும் எதிர்கொள்ளும் தொற்றுநோய்களின் உடனடி சவால்களை எதிர்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.