அமிதாப் பச்சனைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி

 

அமிதாப் பச்சனைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி !

சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்த நிலையில் தற்போது அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமிதாப் பச்சனைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி

இதுகுறித்து அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று காலையில் எனக்கும் எனது தந்தைக்கும் கொரோனா தோற்று இருப்பது உறுதியானது. எங்கள் இருவருக்கும் லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். னது குடும்பத்தினரும் ஊழியர்களும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதை தேவையான அனைத்து அதிகாரிகளுக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம், பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் அமிதாப் பச்சன் வெளியிட்டிருந்த பதிவில் “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினரும் ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். கடந்த பத்து நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சில படங்களின் புரமோஷனுக்கு அமிதாப் பச்சன் வீட்டில் சூட்டிங் செய்த போது புரோடக்சன் குழுவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.