கொரோனா தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மரணம்

 

கொரோனா தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மரணம்

கொரோனா தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் வாலிபர் உயிரிழந்ததால் போரனகொப்பலு கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மரணம்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா பானாவரா அருகே போரனகொப்பலு கிராமத்தில் வசித்து வந்தவர் வசந்தகுமார்(35). கடந்த 4ம் தேதி அன்று அதே பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றிருக்கிறார் வசந்த்குமார். தடுப்பு ஊசி போட்ட பின் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக அவரை அரிசிகெரே ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்துள்ளனர். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட மருத்துவமனைக்கு வசந்தகுமார் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறா. ர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் அந்த வாலிபர் இறந்ததாக குற்றம் சாட்டும் அவரது உறவினர்கள் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதன் பின்னர் வசந்தகுமாரின் உயிரிழப்பு குறித்து மாவட்ட குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஹாசன் மாவட்டத்தில் இதுவரைக்கும் 12 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வசந்தகுமார் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழந்தார் என்பதை ஏற்க முடியாது. அதனால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.