கணவர் தாக்கி பெண் பலியானதாக புகார்- பிரேத பரிசோதனையில் தற்கொலை என தெரிந்தது

 

கணவர் தாக்கி பெண் பலியானதாக புகார்- பிரேத பரிசோதனையில் தற்கொலை என தெரிந்தது

நீலகிரி

ஊட்டியில் குடும்ப தகராறில் கணவர் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவர் தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பெயிண்டிங் தொழிலாளி பிரதீப். இவருக்கு ஜமுனா (27) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த திங்கள் அன்று ஜமுனாவிற்கும், பிரதீப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப், ஜமுனாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவர் தனது சித்தியின் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு சென்றும் பிரதீப் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கணவர் தாக்கி பெண் பலியானதாக புகார்- பிரேத பரிசோதனையில் தற்கொலை என தெரிந்தது

இதில், ஜமுனாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, செவ்வாய்க் கிழமை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமுனாவின் உறவினர்கள், பிரதீப்பை கைதுசெய்யக் கோரி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், ஜமுனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரதே பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஜமுனா உயிரிழந்தால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பிரதீப்பை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.