“வரலாறு காணாத மக்கள் எழுச்சி… அதிமுகவிற்கே வெற்றிமுகம்”

 

“வரலாறு காணாத மக்கள் எழுச்சி… அதிமுகவிற்கே வெற்றிமுகம்”

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், இலுப்பூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு தன் மனைவியுடன் பைக்கில் சென்று வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” கோவிட் நெறிமுறைகளுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் நிறைவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

“வரலாறு காணாத மக்கள் எழுச்சி… அதிமுகவிற்கே வெற்றிமுகம்”

நாங்கள் செய்த பணிகள் மக்களின் மனதில் நின்றதை நான் களத்தில் கண்கூடாகப் பார்த்தேன். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு கேட்டுச் செல்பவர்களுக்கும் எப்போதும் மக்களுடன் மக்களாகப் பயணித்தவர்களுக்குமான வித்தியாசத்தை மக்கள் உணர்ந்து இருக்கின்றனர். மக்களோடு மக்களாகப் பயணித்த காரணத்தால், மக்களிடம் தன்னெழுச்சியை காண முடிகிறது.

“வரலாறு காணாத மக்கள் எழுச்சி… அதிமுகவிற்கே வெற்றிமுகம்”

நான் போட்டியிடும் 4ஆவது தேர்தல் இது. மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் இல்லாத எழுச்சியை இந்தத் தொகுதியில் இப்போது பார்க்கிறேன். செய்த பணிகளை எண்ணி நிறைவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இன்று மாலை 7 மணிக்குப் பிறகே கொரோனா தடுப்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவேன்” என்றார்.