அதிமுக ஆட்சியின் 5 ஆவது ஆண்டு தொடக்கவிழா! அதிமுக ஆயிரம் காலத்து பயிராக செழித்து ஓங்கும்!!

 

அதிமுக ஆட்சியின் 5 ஆவது ஆண்டு தொடக்கவிழா! அதிமுக ஆயிரம் காலத்து பயிராக செழித்து ஓங்கும்!!

அதிமுக ஆட்சியின் 5ம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவுப்பெற்று வரும் 23ம் தேதியுடன் 5ம் ஆண்டு தொடங்கும் நிலையில் அதிமுக ஆயிரம் காலத்து பயிராக செழித்து ஓங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் 5 ஆவது ஆண்டு தொடக்கவிழா! அதிமுக ஆயிரம் காலத்து பயிராக செழித்து ஓங்கும்!!

இதுதொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு தமிழக மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் பணியாற்றிவருகிறது. இன்னும் ஆற்றவேண்டிய பணிகள் இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு. அதிமுக அரசே தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்திட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நேற்றும், இன்றும் ,நாளையில் அதிமுக ஆட்சியே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.