அதிமுகவுக்கு மேலும் ஒரு செய்தித்தொடர்பாளர் நியமனம்!

 

அதிமுகவுக்கு மேலும் ஒரு செய்தித்தொடர்பாளர் நியமனம்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் பேராசிரியர் ச. கல்யாண சுந்தரம்.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள் இன்று முதல் இணைத்துக் கொள்ளப் படுகிறார் தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்கள் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம் கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு மேலும் ஒரு செய்தித்தொடர்பாளர் நியமனம்!

முன்னதாக இந்த பட்டியலில் அப்சரா ரெட்டி இணைக்கப்பட்டார். இனி அப்சரா ரெட்டி தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் பங்கேற்று பேசுவார் என்றும் தலைமை கழகம் அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.