சசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்!

 

சசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்!

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 22ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா நினைவிடம் திறப்பது குறித்தும் சசிகலா விடுதலை குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

சசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்!

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழகத்தில் 22.1.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.