பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்- ஈபிஎஸ், ஓபிஎஸ்

 

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்- ஈபிஎஸ், ஓபிஎஸ்

பாலியல் புகாரில் சிக்கிய தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை தலைவரும், தருமபுரி ஐடி பிரிவு செயலாளரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்- ஈபிஎஸ், ஓபிஎஸ்

மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சை இளைஞர் பாசறை தலைவர் வேல்முருகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அதேபோல் தருமபுரி பொம்மிடியில் வயதான தம்பதி பணம், நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவரும் வேலவன் என்பவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.