“அண்ணாச்சி அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சு?” : ஈபிஎஸ் – ஓபிஎஸ் பதாகைகளை ஏந்தி போராட்டம்!

 

“அண்ணாச்சி அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சு?” : ஈபிஎஸ் – ஓபிஎஸ் பதாகைகளை ஏந்தி போராட்டம்!

திமுகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து முதல்முறையாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டம் போடியில் தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார்.

“அண்ணாச்சி அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சு?” : ஈபிஎஸ் – ஓபிஎஸ் பதாகைகளை ஏந்தி போராட்டம்!

அதேபோல் சேலம் சூரமங்கலத்தில் ஈபிஎஸ் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர்.கோபிசெட்டிபாளையத்தில் ஏ. .கே.செங்கோட்டையன், திண்டிவனத்தில் சிவி சண்முகம் போராட்டம் செய்கின்றனர். அதேபோல் கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ, சென்னை கேகே நகரில் வளர்மதி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

“அண்ணாச்சி அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சு?” : ஈபிஎஸ் – ஓபிஎஸ் பதாகைகளை ஏந்தி போராட்டம்!

கடந்த மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று கொண்டார். ஸ்டாலின் பதவியேற்று 3 மாதங்கள் ஆன நிலையில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாக அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது.