‘சசிகலா எங்கள் கட்சியிலேயே இல்லை’ பொன்னையன் பேட்டி!

 

‘சசிகலா எங்கள் கட்சியிலேயே இல்லை’ பொன்னையன் பேட்டி!

சிறையில் இருக்கும் சசிகலா எங்கள் கட்சியிலேயே இல்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. ஆளும் கட்சியான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்னைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் பதவிக்கு ஈபிஎஸ் உடன் மோதிய ஓபிஎஸ்ஸே பழனிசாமி தான் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என இன்று காலை அறிவித்தார்.

‘சசிகலா எங்கள் கட்சியிலேயே இல்லை’ பொன்னையன் பேட்டி!

இதன் மூலமாக, அதிமுகவில் எழுந்து வந்த பிரச்னை தணிந்திருக்கும் நிலையில், சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தால் புதிதாக என்ன பிரச்னை கிளம்புமோ? எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், சசிகலா வெளியே வந்தால் நிச்சயமாக அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இது, அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளிடையே ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

‘சசிகலா எங்கள் கட்சியிலேயே இல்லை’ பொன்னையன் பேட்டி!

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், சசிகலா எங்கள் கட்சியே இல்லை, அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருக்கிறார். சசிகலாவை இந்த ஆண்டிலேயே வெளியே எடுக்க டிடிவி தினகரன் மும்மரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.