பட்டப்பகலில் பணப்பட்டுவாடா.. ஆதாரத்துடன் சிக்கிய அதிமுக பிரமுகர்கள்!

 

பட்டப்பகலில் பணப்பட்டுவாடா.. ஆதாரத்துடன் சிக்கிய அதிமுக பிரமுகர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கவிருக்கிறது. ஆட்சியை தன் வசப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், ஓட்டுக்கு பணம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளன. பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணி தொடங்கிவிட்டது. இதை தடுக்கும் விதமாக பறக்கும் படையினரும் வருமான வரித்துறையினரும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பணப்பட்டுவாடா.. ஆதாரத்துடன் சிக்கிய அதிமுக பிரமுகர்கள்!

இந்த நிலையில், ஆவடியில் பட்டப்பகலில் பணப்பட்டுவாடா செய்துக் கொண்டிருந்த 3 அதிமுக உறுப்பினர்கள் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்த சரஸ்வதி, அம்சவேனி மற்றும் பிரேம் ஆகிய மூவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

வாக்காளர்கள் பட்டியலுடன் அவர்கள் வீடு வீடாக சென்று பணம் கொடுத்தது ஆதாரத்துடன் நிரூபனமானது. அவர்களிடமிருந்து ரூ. 92 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பணத்தை ஆவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், அவர்களை கைது செய்து விசாரணை தொடர்ந்து வருகின்றனர்.