தேமுதிக விலகல்… அதிமுக மா.செ.க்கு தலைமை அதிரடி உத்தரவு!

 

தேமுதிக விலகல்… அதிமுக மா.செ.க்கு தலைமை அதிரடி உத்தரவு!

இன்றைய அரசியல் செய்திகளில் ஹெட்லைனாக மாறியிருப்பது அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதே. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். அதிமுகவை கடுமையாக விமர்சித்து ஆர்ப்பரிக்கிறார்கள். கொண்டாட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிறார்கள். 25 சீட்டு வரை கேட்ட தேமுதிகவுக்கு 13 சீட்டை தாண்டி கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் தேமுதிக வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக விலகல்… அதிமுக மா.செ.க்கு தலைமை அதிரடி உத்தரவு!

எந்த மாவட்டச் செயலாளர்களுடன் கூட்டம் நடத்தில் விலகல் முடிவை எடுத்ததோ அதே மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க அதிமுக முடிவுசெய்துள்ளது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இன்று மாலை சென்னைக்கு வர அதிமுக தலைமை அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் பேசப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல அதிமுக வேட்பாளர் பட்டியல் குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.