“முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்கிறேன்” – ஓபிஎஸ்

 

“முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்கிறேன்” – ஓபிஎஸ்

பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரப் போராட்ட வீரர்களையும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க பாடுபட்டவர்களில், தன்னலமற்ற மக்கள் சேவை புரிந்தவர்களையும் மக்களின் உரிமைகளை மீட்க போராட்டங்களை நடத்தி அவர்களையும் சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர்களையும் கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு திருவுருவச் சிலைகள் அமைப்பதையும், நினைவு மண்டபம் கட்டுவதையும், அரசு கட்டடங்களுக்கு அவர்களின் பெயர்களை வைப்பதையும் அதிமுக தனது ஆட்சி காலத்தில் வழக்கமாக கொண்டிருந்தது.

“முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்கிறேன்” – ஓபிஎஸ்

இந்திய விடுதலைக்கு முன் மொழி பற்றினையும் ,நாட்டு பற்றினையும் ,ஒருமைப்பாட்டையும் காவிரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி உறங்கிக் கிடக்கும் மக்களை தட்டி எழுப்பி விடுதலை உணர்வினை ஊட்டியவர் மகாகவி பாரதி என்றால், விடுதலைக்குப்பின் பகுத்தறிவு சுயமரியாதை, தன்மானம், சமூகநீதி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி தமிழ்நாட்டில் தமிழ் சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் வகுத்து தந்த பாதையில் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் சென்ற பெருமை, பேரறிஞர் அண்ணா ,புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கலைஞர் மு.கருணாநிதி , புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும்.

“முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்கிறேன்” – ஓபிஎஸ்

சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட கழகம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்களைப் பெருமைப்படுத்தும் பணியினையும் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை பாதுகாப்பதற்காக ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை மா ண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு திராவிடர் கழகம் வழங்கி கௌரவித்தது என்பதை இந்தத் தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன்

அவர் சொன்னார் ,இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து போகாமல் எவன் சொன்ன சொல்லானாலும் பகுத்தறிந்து உள் அறிவால் உணர் என்று சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதை வற்புறுத்தி மக்களிடையே எடுத்துச் சென்ற தமிழ்நாட்டில் ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.