கோவிலுக்குள் பெண்களுக்கு பணப்பட்டுவாடா! அதிமுக அடாவடி…
Mar 29, 2021, 21:28 IST1617033502000
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிவருவதால், பல்வேறு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ய ஆரம்பித்து விட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. ஆங்காங்கே பறக்கும்படையினர், காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணி ஒருபுறம் மேற்கொண்டாலும் பணப்பட்டுவாடாவும் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் கோவிலுக்குள் வைத்து பெண்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாவூர் கிராமத்தில் அமைச்சருக்கு ஆரத்தில் எடுத்தவர்களுக்கு கோவிலுக்குள் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் படம் பிடிப்பார்கள் என்பதால் கோவில் கதவை பூட்டிவிட்டு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர்.