ரூ.28 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்

 

ரூ.28 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை அதிமுக எம்எல்ஏகே.வி.ராமலிங்கம் தொடங்கிவைத்தார். ஈரோடு குயிலாந்தோப்பு பொன்னுசாமி வீதியில் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம்மற்றும் நியாய விலைக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம் மற்றும் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு, கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

ரூ.28 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்

தொடர்ந்து, கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் வீரப்பம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் கற்கள் மூலம் தளம் அமைக்கும் பணிகளையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியின்போது கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைக்கும் பணி குறித்து பொதுமக்கள் முறையிட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம் தெரிவித்தார்.