கொரோனா சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏவின் மனைவி, மகளுக்கு கொரோனா உறுதி!

 

கொரோனா சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏவின் மனைவி, மகளுக்கு கொரோனா உறுதி!

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மதனந்தபுரம் கே.பழனிக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏவின் மனைவி, மகளுக்கு கொரோனா உறுதி!

எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற சந்தேகத்தில், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் எம்.எல்.ஏ பழனியின் மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.