“அதிமுக ஆள போகிறது; மக்கள் வாழ போகிறார்கள்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

“அதிமுக ஆள போகிறது; மக்கள் வாழ போகிறார்கள்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

2021 சட்ட பேரவை தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

“அதிமுக ஆள போகிறது; மக்கள் வாழ போகிறார்கள்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தான் இன்றைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த அறிவிப்பு இன்று வெளியாகி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை ஓபிஎஸ் அறிவித்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதேபோல் ஓபிஎஸ் கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்ட்டுள்ளது.

“அதிமுக ஆள போகிறது; மக்கள் வாழ போகிறார்கள்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2021 ஆம் ஆண்டு சட்ட பேரவை தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும். அதிமுக ஆளப் போகிறது; மக்கள் வாழப் போகிறார்கள் என்றார்.

“அதிமுக ஆள போகிறது; மக்கள் வாழ போகிறார்கள்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முன்னதாக அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர் . அப்போது அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.