‘அதிமுக எந்த கொம்பனுக்கும் பயப்படாது’ : அமைச்சர் சி. வி.சண்முகம் அதிரடி!

 

‘அதிமுக எந்த கொம்பனுக்கும் பயப்படாது’  : அமைச்சர் சி. வி.சண்முகம் அதிரடி!

அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் காமெடி செய்ய வேண்டாம் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகன் கல்குவாரி ஒன்றை நடத்துவதாகவும் அதற்கு அமைச்சர் சி.வி,சண்முகம் லைசைன்ஸ் கொடுத்துள்ளார். அதிமுக அரசில் டெண்டர்கள் அனைத்தும் வேண்டியவர்களே கொடுக்கப்பட்டு வருகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

‘அதிமுக எந்த கொம்பனுக்கும் பயப்படாது’  : அமைச்சர் சி. வி.சண்முகம் அதிரடி!

இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்சை ரத்து கோரிய ஸ்டாலினின் அறிக்கைக்கு பதிலளித்துள்ளார். அதில், “பொது ஊழியர்களின் உறவினர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளக் கூடாது என எந்த விதியும் இல்லை.

‘அதிமுக எந்த கொம்பனுக்கும் பயப்படாது’  : அமைச்சர் சி. வி.சண்முகம் அதிரடி!

பொது ஏலத்தில் சக்கரபாணி மகன் பங்கேற்று குவாரி ஏலம் எடுத்துள்ளார். எந்த விதத்திலும் முறைகேடு ஏற்படவில்லை . அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் காமெடி செய்ய வேண்டாம் . தவறு செய்திருந்தால் நான் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.

‘அதிமுக எந்த கொம்பனுக்கும் பயப்படாது’  : அமைச்சர் சி. வி.சண்முகம் அதிரடி!

தொடர்ந்து பேசிய அவரிடம் அமித்ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், அதிமுக எந்த கொம்பனுக்கும், எவனுக்கும் பயப்படாது என்று காட்டமாக பதிலளித்தார்.