செப்.28 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்: ஓபிஎஸ்- ஈபிஎஸ் அறிவிப்பு

 

செப்.28 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்: ஓபிஎஸ்- ஈபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் எப்போது எங்கே நடைபெறுகிறது என அதிமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

செப்.28 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும்: ஓபிஎஸ்- ஈபிஎஸ் அறிவிப்பு

அதில், அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தலைமை கழகத்தில் காலை 9:45 மணிக்கு, கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும், கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்குத் தனித் தனியே அழைப்பு விடுக்கப்படும் என்றும் அனைத்து கழக உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்திலும் செயற்குழு கூட்டம் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.