“விசுவாசம் இருந்தால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க” : ஜான் பாண்டியனின் வாக்கு வேட்டை!!

 

“விசுவாசம் இருந்தால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க” : ஜான் பாண்டியனின் வாக்கு வேட்டை!!

தேவேந்திர குல வேளார்கள் என்ற பெயர் மாற்றத்தை எண்ணி அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

“விசுவாசம் இருந்தால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க” : ஜான் பாண்டியனின் வாக்கு வேட்டை!!

அதிமுக கூட்டணியை பொருத்தவரை பாமகவிற்கு 23 தொகுதிகள், பாஜகவிற்கு 20 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. அதனைத் தவிர்த்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு எழும்பூர் தனித்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம்ஆண்டு எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜான்பாண்டியனை எதிர்த்து திமுகவின் பரிதி இளம்வழுதி வெற்றிபெற்றார். ஜான் பாண்டியன் தலித் சமுதாயத் தலைவராக அறியப்பட்டாலும் நாடார், வன்னியர் சமுதாயத்துடன் இணக்கமாக இருக்க கூடியதால் அவருக்கு எழும்பூரில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளதாம்.

“விசுவாசம் இருந்தால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க” : ஜான் பாண்டியனின் வாக்கு வேட்டை!!

இந்நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தேவேந்திர குல வேளார்கள் என்ற பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட நமக்கு உறுதுணையாக இருந்தது அதிமுக. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்த அதிமுகவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் விசுவாசமாகவும் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். நாடாளுமன்றத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்தபோது திமுக வெளிநடப்பு செய்தது. இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்” என்றார்.