“சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது” – எடப்பாடி பழனிசாமி

 

“சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது”  – எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

“சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது”  – எடப்பாடி பழனிசாமி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. தோல்வி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினா.ர் இந்த சூழலில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தொலைபேசி வாயிலாக அழைத்து சசிகலா பேசி வருகிறார். . அத்துடன் ஒன்றுபட்டு இருந்திருந்தால் தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது”  – எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது. வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் திமுக மக்களை ஏமாற்றி விட்டது . சசிகலா இருந்தபோதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது. ஆரம்பத்தில் விழிப்புணர்வு இல்லாததால் கொரோனா தடுப்பூசிகளின் வீணடிக்கப்பட்டன” என்றார்.